இகரம்
(முதல் பருவம்)
சின்னத் தம்பி சிரிப்பைப் போலச்
செடியில் முல்லை பூத்ததே! – வீட்டுச்
செடியில் முல்லை பூத்ததே!
சின்ன அக்கா சிரிப்பைப் போலச்
செந்தா மரையும் பூத்ததே! – குளச்
செந்தா மரையும் பூத்ததே!
அம்மா சிரிக்கும் சிரிப்பைப் போல
அல்லி மலரும் பூத்ததே! – செவ்
வல்லி மலரும் பூத்ததே!
அப்பா சிரிக்கும் சிரிப்பைப் போல
அழகு ரோசா பூத்ததே! - முள்
அழகு ரோசா பூத்ததே!
-வாணிதாசன்