இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 8
8.8 செந்தமிழ்ச்செல்வம்

திருக்குறள்

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று

(குறள் – 108)

-திருவள்ளுவர்

பொருள்:

பிறர் செய்த உதவியினை மறப்பது நல்லதன்று. அவர் செய்த தீமையினை அப்போதே மறப்பது நல்லதாகும்.