இகரம்
(முதல் பருவம்)
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை.
(குறள் – 400)
-திருவள்ளுவர்
(கேடில் – அழிவில்லாத; விழுச்செல்வம் – சிறந்த செல்வம்; மாடல்ல – செல்வம் அல்ல)
ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியே.
கல்வியைத் தவிர மற்றப் பொருள்கள் யாவும் செல்வம் அல்ல.