இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 12
12.8 செந்தமிழ்ச்செல்வம்

திருக்குறள்

சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க

சொல்லில் பயனிலாச் சொல்

(குறள் – 200)

-திருவள்ளுவர்

பொருள்:

நாம் பயன்தரக்கூடிய சொற்களையே பேசவேண்டும்.

பயன்தராத வீண் சொற்களைப் பேசவேண்டாம்.