இகரம்
(முதல் பருவம்)

பாடம் - 13
13.8 செந்தமிழ்ச்செல்வம்

இனியவை நாற்பது

கற்றார்முன் கல்வி உரைத்தல் மிகஇனிதே

மிக்காரைச் சேர்தல் மிகமாண முன்இனிதே

எள்துணை யானும் இரவாது தான்ஈதல்

எத்துணையும் ஆற்ற இனிது

(பாடல் – 16)

-பூதஞ்சேந்தனார்.

(உரைத்தல் – கூறுதல்; ஈதல் – கொடுத்தல்)

பொருள்:

கற்றவர்முன் தாம் கற்றதை எடுத்துரைத்தல் மிகவும் இனியது.

தம்மைவிட அறிவில் சிறந்தவருடன் பழகுவது மிகவும் இனியது.

எள் அளவு கூடத் தான் பிறரிடம் பொருளுதவி கேட்காமல்.

பிறர்க்குக் கொடுத்தல் எல்லா வகையிலும் மிகவும் இனியதாகும்.