இகரம்
(இரண்டாம் பருவம்)
![]() |
தாய் தன் குழந்தையைக் கண்ணை இமை காப்பதுபோலப் பாதுகாத்தாள். |
![]() |
கண்ணனுக்கு ஓட்டப்போட்டியில் முதற்பரிசு கிடைக்காததால், அவன் கப்பல் கவிழ்ந்தாற்போல வருத்தமுற்றான். |
![]() |
மதியும் மொழியும் நகமும் சதையும்போல இணைபிரியாமல் ஒற்றுமையாக இருந்தனர். |
![]() |
பரிதியும் கதிரவனும் கீரியும் பாம்பும்போல எப்போது பார்த்தாலும் சண்டையிட்டுக் கொண்டே இருந்தனர். |
![]() |
ஆசிரியர் நடத்துகின்ற பாடம் பசுமரத்தாணிபோல மனத்தில் பதிகிறது. |
வ.எண் | உவமைத்தொடர் | உணர்த்தும் பொருள் |
1 | கண்ணை இமை காப்பதுபோல | பாதுகாப்பு |
2 | கப்பல் கவிழ்ந்தாற்போல | வருத்தம் |
3 | நகமும் சதையும்போல | ஒற்றுமை |
4 | பசுமரத்தாணிபோல | நிலைபேறு |
5 | கீரியும் பாம்பும்போல | பகை |
6 | மழைமுகம் காணாப் பயிர்போல | துன்பம் |
7 | தாயைக் கண்ட சேயைப்போல | மகிழ்ச்சி |
8 | குடத்திலிட்ட விளக்குப்போல | சிலரால் மட்டுமே அறியப்படுதல் |
9 | அடியற்ற மரம்போல | பேரிழப்பு |
10 | மலரும் மணமும்போல | இணைபிரியாமை |
11 | சூரியனைக் கண்ட பனிபோல | துன்பம் விலகுதல் |
12 | பசுத்தோல் போர்த்திய புலிபோல | ஏமாற்றுதல் |
13 | காட்டுத்தீயைப்போல | விரைவாகப் பரவுதல் |
14 | அனலில் இட்ட மெழுகுபோல | துயரம் |
15 | குன்றின் மேலிட்ட விளக்குப்போல | அனைவராலும் அறியப்படுதல் |