இகரம்
(இரண்டாம் பருவம்)
நிறுத்தக்குறிகளை நமக்கு அறிமுகம் செய்தவர்கள் ஐரோப்பியர்கள். மொழியில் தெளிவை உணர்த்த நிறுத்தக்குறியீடுகள் பயன்படுகின்றன. இவை, ஒரு தொடரின் பொருள் வேறுபாட்டை உணர்த்துவதற்கு அடிப்படையாகும். மொழியைத் தெளிவாகப் புரிந்துகொள்ள நிறுத்தக்குறிகள் துணை நிற்கின்றன.
காற்புள்ளி | , | ஒற்றை மேற்கோள் | ' |
அரைப்புள்ளி | ; | இரட்டை மேற்கோள் | " " |
முக்காற்புள்ளி | : | வியப்புக்குறி | ! |
முற்றுப்புள்ளி | . | அடைபுக்குறிகள் | ( ) |
வினாக்குறி | ? | இடைக்கோடு | - |
உரைப்பகுதியில் நிறுத்தக்குறிகள்
பாரதியார் எட்டயபுரம் என்னும் ஊரில் 11-12-1882இல் பிறந்தார். இவர் தந்தையார் சின்னச்சாமி; தாயார் இலக்குமி அம்மையார். பாரதியார் நாடு, மொழி, சமுதாயம் பற்றி நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். இவரை ‘மகாகவி‘ என்று நாம் போற்றுகிறோம். இவர் தம் 39ஆம் வயதில் (11-9-1921) இயற்கை எய்தினார்.
உரையாடலில் நிறுத்தக்குறிகள்