இகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 29
செயப்பாட்டு வினைத்தொடர்களைத் தேர்ந்தெடுக்கவும்
பூனை எலியைப் பிடித்தது   -   எலி பூனையால் பிடிக்கப்பட்டது.
மல்லிகா மலர்களைப் பறித்தாள்   -   மலர்கள் மல்லிகாவால் பறிக்கப்பட்டது.
புலி மானைத் துரத்தியது    -   மான் புலியால் துரத்தப்பட்டது.
பெண்கள் நடனம் ஆடினார்கள்       -   நடனம் பெண்களால் ஆடப்பட்டது.
இளவரசி யாழ் மீட்டினாள்        -    யாழ் இளவரசியால் மீட்டப்பட்டது.