உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 1
1.7 செந்தமிழ்ச்செல்வம்

நாலடியார்

கல்வி கரை இல; கற்பவர் நாள் சில;
மெல்ல நினைக்கின் பிணி பல; தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே, நீர்ஒழியப்
பால் உண் குருகின் தெரிந்து.

(பாடல் – 135)

- சமண முனிவர்கள்

(பிணி – நோய்; தெள்ளிதின் – தெளிவாக; குருகு – கொக்கு)

பொருள்

கல்வி கற்பதற்கு எல்லையில்லை. அதனைக் கற்பவர்களின் வாழ்நாள்கள் குறைவு. சற்று அமைதியாக நினைத்துப்பார்த்தால் அந்தக் குறைந்த வாழ்நாள்களில் நோயுடன் வாழும் நாள்கள் பலவாக இருக்கின்றன. அதனால் அறிஞர்கள் ‘பாலையும் நீரையும் கலந்து வைத்தால் பாலை மட்டும் அருந்தும் கொக்கைப் போல’ பொருத்தமுடைய நூல்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றைத் தெளிவுபட ஆராய்ந்து கற்பார்கள்.

பழமொழி

கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு

சொல்வதைக் கேட்டு எழுதுக

  1. பண்பாடு
  2. தனித்தன்மை
  3. உயர்சிந்தனை
  4. செம்மொழி
  5. இலக்கியம்

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

எ.கா. : காலை நேரம்

நடைப்பயிற்சி செய்யக் காலை நேரம் நல்லது

  1. முத்தமிழ்
  2. தகுதி
  3. பாராட்டு