உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 2
2.7 செந்தமிழ்ச்செல்வம்

திருக்குறள்

எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு.

(குறள் 426)

- திருவள்ளுவர்

(எவ்வது – எவ்வாறு; அவ்வது – அவ்வாறு)

பொருள்

உலகம் எவ்வாறு உயர்ந்தோர் வழியில் செல்கிறதோ, அதற்கேற்ப நாமும் நடந்து கொள்வதே அறிவாகும்.

பழமொழி

இளங்கன்று பயம் அறியாது

சொல்வதைக் கேட்டு எழுதுக

  1. ஒலிப்புமுறை
  2. ஒருங்குறி
  3. தமிழ்ப்பணி
  4. கல்விக்கழகம்
  5. வலையொளி

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

எ.கா. இணையம்

கணினி அறிவியலின் அடுத்த மைல்கல்லாகத் திகழ்வது இணையம் ஆகும்.

  1. எழுத்துரு
  2. மின்னஞ்சல்
  3. மின் இதழ்கள்