உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 4
4.7 செந்தமிழ்ச்செல்வம்

சிலப்பதிகாரம்

மா மழை போற்றுதும்! மா மழை போற்றுதும்!
நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளி போல்.
மேல் நின்று தான் சுரத்தலான்.

(புகார்க் காண்டம்; 1 – மங்கல வாழ்த்துப் பாடல் 7-9)

(மாமழை – உயர்ந்த மழை; வேலி – சூழ்ந்தல்; அவன் – இறைவன்; அளி – ஈகை (கொடுத்தல்); சுரத்தல் – பொழிதல்)

பொருள்

மாமழையைப் போற்றுவோம்; மாமழையைப் போற்றுவோம். கடல் சூழ்ந்த இவ்வுலகிற்கு இறைவன் அளித்த கொடையைப்போல் மேலிருந்து பொழிவதால் மாமழையைப் போற்றுவோம்.

பழமொழி

தருமம் தலைகாக்கும்

சொல்வதைக் கேட்டு எழுதுக

  1. கிராமம்
  2. தடுப்புச்சுவர்
  3. கடல்மட்டம்
  4. கவலை
  5. ஊர் மக்கள்

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

எ.கா : காலை நேரம்

கடற்கரைக்குச் சென்றால், கடல் நீரில் கால் நனைத்து விளையாடலாம்.

  1. துளை
  2. தடுப்புச்சுவர்
  3. உதவி