உகரம்
(முதல் பருவம்)
முற்றுப்பெறாத வினைச்சொல் எச்சம்/எச்சவினை எனப்படும். எச்சவினை பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிந்தால் பெயரெச்சம் ஆகும். பெயரெச்சம், காலவகையால் மூவகைப்படும்.
| இறந்தகாலம் | - | சென்ற செழியன் | ||
| நிகழ்காலம் | - | செல்கின்ற செழியன் | ||
| எதிர்காலம் | - | செல்லும் செழியன் |
![]() |
![]() |
|
| படித்த மாணவன் படிக்கின்ற மாணவன் படிக்கும் மாணவன் | பறந்த பறவை பறக்கின்ற பறவை பறக்கும் பறவை | |
![]() |
![]() |
|
| விளையாடிய சிறுவன் விளையாடுகின்ற சிறுவன் விளையாடும் சிறுவன் | எழுதிய மாணவன் எழுதுகின்ற மாணவன் எழுதும் மாணவன் |
| தமிழ்நாட்டில் சிதம்பரத்திற்கு அருகிலுள்ள ஊர் வடலூர். இவ்வூரில், மக்களின் பசிப்பிணி நீக்கும் வகையில் மூன்று வேளையும் உணவு தயாரிக்கப்படுகிறது. ஏறக்குறைய 150 ஆண்டிற்குமுன் திரு.அருட்பிரகாச வள்ளலாரால் ஏற்றி வைக்கப்பட்ட இந்த அணையா அடுப்பின் பணி இன்றும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. |
|