உகரம்
(முதல் பருவம்)
மனித வாழ்வில், ஒவ்வொரு பருவத்திற்கும் சில கடமைகள் உண்டு. அவற்றுள். இளமைப்பருவம் கல்விக்கு உரியது. எனவேதான் ‘இளமையில் கல்’ என்றார் ஔவையார். கல்வியானது, கற்பவனின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்ப அமைதல் வேண்டும். அத்தகைய கல்வியைக் கற்றுத்தரும்படி, தன் மகனின் ஆசிரியருக்கு ஆபிரகாம்லிங்கன் கடிதம் எழுதினார்.
சிறந்த கல்வி, மனித சமுதாயத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லும். மக்களைச் சீர்திருத்திச் செம்மைப்படுத்தும். மனித ஆற்றலை மேம்படுத்தும். பண்பாட்டினைக் காக்கும். அறிவியலை வளர்க்கும். நாட்டுப்பற்றை உண்டாக்கும். இத்தகு ஆற்றல் கொண்ட கல்வியையே இளைய தலைமுறை பெற வேண்டும். இதனையே ஆபிரகாம் லிங்கனின் கடிதம் வலியுறுத்துகிறது. அக்கடிதத்தின் சில பகுதிகளை இப்பாடத்தில் காண்போம்.
தன்னல அரசியல்வாதிகளுக்கு இடையில்
புத்தகங்கள் என்ற புதிய உலகத்தின் வாசல்களை
வானில் பறக்கும் பறவைகளின்
அவனுக்குப் பொறாமை குணம் வந்துவிடாமல்
மனிதர்கள் அனைவரின் குரலையும்
துன்பமான வேளைகளில் சிரிப்பது எப்படி என்று
அவன் தன் மீதே மிகுந்த நம்பிக்கை வைக்க வேண்டும்
அவனை அன்பாக நடத்துங்கள்
இது மிகப்பெரிய பட்டியல்தான்.
| 1. | வனப்பு | - | அழகு | ||
| 2. | மௌனம் | - | அமைதி | ||
| 3. | வாசல் | - | நுழைவாயில் | ||
| 4. | செல்லம் | - | மிகுந்த அன்பு |
புத்தகங்கள்
பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். ஏனெனில் தன்னுடைய வலிமையை மௌனமாக வெளிப்படுத்துவது பொறுமை.
ஆசிரியர், மாணவனுக்கு இயற்கையையும், வானில் பறக்கும் பறவைகளின் வியப்பு மிகுந்த அழகையும், சூரிய ஒளியில் மின்னும் தேனீக்களின் வேகத்தையும் பசுமையான மலையில் உள்ள மலர்களின் வனப்பையும் இரசிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும்.