உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 12
12.7 செந்தமிழ்ச்செல்வம்

திருக்குறள்

பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்.

(குறள் 675)

- திருவள்ளுவர்

(இருள் – அறியாமைமை; எண்ணி – ஆலோசித்தல்)

பொருள்

ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன்பு வேண்டிய பொருள், தகுந்த கருவி, காலம், பொருத்தமான செயல், ஏற்ற இடம் ஆகிய ஐந்தையும் ஐயம் நீங்க ஆராய வேண்டும். அதன்பின்பு அச்செயலைச் செய்யவேண்டும்.

பழமொழி

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

சொல்வதைக் கேட்டு எழுதுக

உலகத்தொழில் கண்காட்சி துபாயில் நடைபெற்றது. அதில், பல நாடுகள் பங்குபெற்றன. அவை, தங்களின் தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் காட்சிப்படுத்தின.

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

எ.கா. முதலீடு

நதியா, புதிய தொழில் தொடங்க முதலீடு செய்தாள்.

  1. சுற்றுலா
  2. தொழில்கள்
  3. விடுமுறை