உகரம்
(முதல் பருவம்)

பாடம் - 14
14.7 செந்தமிழ்ச்செல்வம்

நீதிநெறி விளக்கம்

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்

(பாடல் – 53)

-குமரகுருபரர்

(மெய் – உடல், துஞ்சார் – தூங்காதவர், அவமதிப்பு – அவமானம், கொள்ளார் – கருதாதவர், கருமம் – செயல்)

பொருள்

தாம் எடுத்துகொண்ட செயலை முடிப்பதிலேயே கவனம் கொண்டவர்கள். தங்களுக்கு உடலால் வரும் வருத்ததைக் கவனிக்கமாட்டார்கள். பசியினைப்பற்றி யோசிக்கமாட்டார்கள். உறங்கமாட்டார்கள். யார் தமக்கு தீங்கு செய்தாலும் அதைப் பொருட்படுத்தமாட்டார்கள். காலத்தின் அருமையையும் பார்க்கமாட்டார்கள். பிறர் தங்களை அவமதித்தாலும் கருதமாட்டார்கள்.

பழமொழி

பழகப் பழகப் பாலும் புளிக்கும்

சொல்வதைக் கேட்டு எழுதுக

1. மாமல்லபுரம், தமிழ்நாட்டில் உள்ளது.

2. சிற்பங்களைச் செதுக்குபவர் சிற்பி.

3. நீரில் பறவைகள் நீந்துகின்றன.

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

எ.கா. வியப்பு

மைசூர் அரண்மனையைக் கண்டதும் வியப்பு ஏற்பட்டது

  1. பரிசு
  2. சிலைகள்
  3. சக்கரம்