உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 17
17.3 தெரிந்துகொள்வோம்

இடைச்சொற்கள்

தனித்து இயங்காமல் பெயர்ச்சொல்லையோ வினைச்சொல்லையோ சார்ந்து வருவது இடைச்சொல் ஆகும்.

1) வேற்றுமை எடுத்துக்காட்டு படங்கள்
குமரன் புத்தகத்தைப் படித்தான்.
ஆல் இது, மரத்தால் செய்த பெட்டி.
கு கவின் ஓவியத்திற்கு வண்ணம் தீட்டினான்.
2) விகுதிகள் எடுத்துக்காட்டு படங்கள்
ஆன் விமல் பாடல் பாடினான்
ஆள் குழலி வீணை வாசித்தாள்
ஆர் அரசர் பரிசு வழங்கினார்
3) உவம உருபு எடுத்துக்காட்டு படங்கள்
போல பொன்னி மயில்போல ஆடினாள்.
முயல் மான்போலத் துள்ளியது.
வீரன் புலிபோலப் பாய்ந்தான்.