உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 25
25.7 செந்தமிழ்ச்செல்வம்

நல்ல உணவு உண்போம்

உண்ணுவோமே – நன்றாய்

உண்ணுவோமே.

வெண்ணெயோடே – அப்பம்

விருப்பமோடே – நாம் உண்ணுவோமே

பழங்களோடே பாலும்

பகிர்ந்து கொள்வோம்.

கிழங்கினோடே – இனிய

கீரை உண்போம்.

விழுங்க வேண்டா – உணவை

மெல்ல வேண்டும்.

- ம.இலெ.தங்கப்பா

பழமொழி

நொறுங்கத் தின்றால் நூறு வயது.

சொல்வதைக் கேட்டு எழுதுக

  1. மூலிகைகளின் அரசி துளசி
  2. ஆற்றலை வளர்க்கும் ஆவாரை்
  3. அறுவை சிகிச்சை மூலிகை சிறுபீளை

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

  1. தாவரம்
  2. காற்று
  3. செடிகொடிகள்
  4. பாகங்கள்