உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 27
27.3 தெரிந்து கொள்வோம்

வழாநிலைத் தொடர்கள்

வ.எண் பிழையான தொடர்கள் பிழையற்ற தொடர்கள்
1. நானும் அன்பரசியும் சுற்றுலா சென்றேன். நானும் அன்பரசியும் சுற்றுலா சென்றோம்.
2. எங்கள் வீட்டிற்கு நேற்று உறவினர் வந்திருக்கிறார். எங்கள் வீட்டிற்கு நேற்று உறவினர் வந்தார்.
3. கண்மணி மாலை தொடுத்தான். கண்மணி மாலை தொடுத்தாள்.
4. நான் ஒரு புதிய எழுதுகோல் ஒன்று வாங்கினான். நான் புதிய எழுதுகோல் ஒன்று வாங்கினேன்.
6. கண்ணன் வரைந்த ஓவியம் இதுவல்ல. கண்ணன் வரைந்த ஓவியம் இதுவன்று.
7. செல்வி, நில், நானும் வந்தேன். செல்வி, நில், நானும் வருகிறேன்.
8. ஒருவர் எப்படிப் பேசுகிறாரோ அவ்வாறேவாழ்ந்துகாட்ட வேண்டும். ஒருவர் எப்படிப் பேசுகிறாரோ அப்படியேவாழ்ந்துகாட்ட வேண்டும்.
9. ஒரு ஆலமரத்தில் ஓர் கிளியைக் கண்டேன். ஓர் ஆலமரத்தில் ஒரு கிளியைக் கண்டேன்.
10. கந்தன் தான் செய்த தவறை எண்ணி வருந்தினான். கந்தன் தான் செய்த தவற்றை எண்ணி வருந்தினான்.
11. அழகுமயில் தோகை விரித்து ஆடின. அழகுமயில் தோகை விரித்து ஆடியது.
12. திருக்குறள் இல்லங்கள்தோறும் இருக்கவேண்டிய ஓர் அறநூலாகும். திருக்குறள் இல்லந்தோறும் இருக்கவேண்டிய ஓர் அறநூலாகும்.
13. பழமொழி நானூறு என்னும் நூலில் ஒவ்வொரு பாடல்களிலும் ஒரு பழமொழி இருக்கும். பழமொழி நானூறு என்னும் நூலில் ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழி இருக்கும்.