உகரம்
(இரண்டாம் பருவம்)
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!
ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு!
உள்ளத்திலே ஒரு கள்ளமில்லாமல்
ஊருக்குள்ளே பல பேதங்கொள்ளாமல்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!
சண்டைகள் தீர்ந்தே மனிதர்கள் சேர்ந்தால்
தரணியில் அது புதுமை!
உண்மை தெரிந்தால் தன்னை உணர்ந்தால்
ஓடி மறைந்திடும் மடமை!
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!
ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு!
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
(கள்ளம் - குற்றம் ; பேதம் – பாகுபாடு; தரணி – உலகம்; மடமை – அறியாமை)
தனிமரம் தோப்பாகாது