உகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 30
30.3 தெரிந்து கொள்வோம்

தொடர் உருவாக்குதல்

ஆசிரியர் பாடம் நடத்தினார்


ஆசிரியர் மாணவர்களுக்குப் பாடம் நடத்தினார்


ஆசிரியர் மாணவர்களுக்குத் தமிழ்ப் பாடம் நடத்தினார்

நான் கடற்கரைக்குச் சென்றேன்.


நானும் அண்ணனும் கடற்கரைக்குச் சென்றோம்.


நானும் அண்ணனும் உறவினர்களோடு கடற்கரைக்குச் சென்றோம்.

நான் கபடி விளையாடினேன்.


நானும் என் நண்பர்களும் கபடி விளையாடினோம்.


நானும் என் நண்பர்களும் இரு அணிகளாகக் கபடி விளையாடினோம்.

நான் புத்தகம் படித்தேன்.


நான் கவிதைப் புத்தகம் படித்தேன்.


நான் நூலகம் சென்று கவிதைப் புத்தகம் படித்தேன்.

தகவல் துளி

அன்னை தெரசா கொல்கத்தாவில் குழந்தைகள் காப்பகம் ஒன்றைத் தொடங்கினார். அதற்கு, ‘நிர்மலா சிசுபவன்’ என்று பெயரிட்டார். 1953ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் நாள் சிசுபவனுக்கு முதல் குழந்தை கொண்டு வரப்பட்டது. அன்றுமுதல் ஆயிரக்கணக்கான ஆதரவற்ற குழந்தைகளைச் சிசுபவன் காத்து வருகிறது.


அன்னை தெரசா