ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 1
1.7 செந்தமிழ்ச்செல்வம்

கவிதை

உள்ளத் துள்ளது கவிதை – இன்பம்
உருவெ டுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில், உண்மை
தெரிந்து ரைப்பது கவிதை

- கவிமணி தேசிக விநாயகனார்

பொருள்

கவிதை என்பது உள்ளத்திலிருந்து வெளிப்படும். அதனைப் படிப்பவர்க்கு மகிழ்ச்சியைத் தரும். தெளிவான அழகிய தமிழில் உண்மையை எடுத்துரைப்பதாக அமையும்.

பழமொழி

விளையும் பயிர் முளையிலே தெரியும்.

சொல்வதைக் கேட்டு எழுதுக

  1. பாரதியார் பாடிய நூல்களுள் ஒன்று குயில்பாட்டு.
  2. பாரதியும், ஷெல்லியும் கவிதைமீது ஈடுபாடு கொண்டிருந்தனர்.
  3. அன்பினால் மட்டுமே தீமையை வெல்ல முடியும்.

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

  1. தோழர்
  2. நூல்கள்
  3. நற்பண்பாளர்
  4. விதிமுறைகள்