ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 2
2.7 செந்தமிழ்ச்செல்வம்

திருக்குறள்

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.

- (குறள் : 399)

- திருவள்ளுவர்

(இன்புறுவது – மகிழ்வது; காமுறுவர் – விரும்புவர்)

பொருள்:

தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும் இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும் (அக்கல்வியையே) விரும்புவர்.

பழமொழி

நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும்.

சொல்வதைக் கேட்டு எழுதுக

  1. ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஊரில் ஒரு சிறைச்சாலை மூடப்படும்.
  2. மனிதனின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு புத்தகம்.

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

  1. பதற்றம்
  2. வேடிக்கை
  3. மருத்துவமனை