ழகரம்
(முதல் பருவம்)
வினையைக்கொண்டு முடியும் எச்சம், வினையெச்சம்.
![]() |
அப்பா | : | சுற்றுலா எப்படி இருந்தது? | |
| முல்லை | : | பயனுடையதாக இருந்தது அப்பா. | ||
| அப்பா | : | என்னவெல்லாம் பார்த்தாய்? | ||
| முல்லை | : | மாமல்லபுரத்தின் சிற்பங்களைக் கண்டு மகிழ்ந்தேன். அங்கு ஒரே கல்லில் செதுக்கப்பெற்ற சிற்பங்களைப் பார்த்து வியந்தேன். | ||
| அப்பா | : | பிறகு? | ||
| முல்லை | : | கடற்கரைக் கோவிலைப் பார்க்கச் சென்றேன். | ||
| அப்பா | : | அப்படியா? | ||
| முல்லை | : | ஆம், அப்பா. பின்னர் கடற்கரை மணலில் நாங்கள் மெல்ல நடந்தோம். அங்குக் கடல்நீரில் கால் நனைத்து விளையாடினோம். |
உரையாடலில் வந்துள்ள கண்டு மகிழ்ந்தேன், பார்த்து வியந்தேன், பார்க்கச் சென்றேன், மெல்ல நடந்தோம், நனைத்து விளையாடினோம் ஆகிய சொற்கள் வினையெச்சங்கள் ஆகும்.
|
தெரிநிலை வினையெச்சம் |
எழிலன் நூலகத்திற்குப் படிக்கச் சென்றான். |
|
குறிப்பு வினையெச்சம் |
பூங்காவில் தாத்தா மெல்ல நடந்தார். |
|
எதிர்மறை வினையெச்சம் |
அலுவலகத்திற்கு நேரமானதால், இராமு உண்ணாமல் சென்றான். |