திருக்குறள்
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்
- (குறள் : 575)
- திருவள்ளுவர்
(கண்ணோட்டம் – இரக்கம்)
பொருள்:
கண்ணிற்கு அணிகலம் என்று சொல்லப்படுவது இரக்கமே ஆகும். அவ்வாறு இரக்கம் இல்லாத கண், ‘புண்’ என்று கூறப்படும்.
பழமொழி
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.
சொல்வதைக் கேட்டு எழுதுக
- வறியவர்க்கு ஈதல் வேண்டும்.
- பிறர்க்கு உதவுதல் சிறந்த மனிதநேயம்.
- அன்பைவிடச் சிறந்த பண்பு இல்லை.
சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக
- உணவு
- உறவினர்
- ஓய்வு