ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 5
5.3 தெரிந்து கொள்வோம்

செயப்படுபொருள் குன்றிய வினை

ஒரு வினை செயப்படுபொருளை ஏற்காமல் வருவது செயப்படுபொருள் குன்றிய வினை எனப்படும்.

எ.கா. மரம் விழுந்தது

இத்தொடரில் மரம் – எழுவாய் ; விழுந்தது – பயனிலை. செயப்படுபொருள் இல்லை. இவ்வாறு செயப்படுபொருளை ஏற்காத வினைகள் செயப்படுபொருள் குன்றிய வினை எனப்படும்.


விமானம் உயரே பறந்தது

கவிதா விரைவாக ஓடினாள்

நான் பள்ளிக்குச் சென்றேன்

காற்று வேகமாக வீசியது

அவள்மெதுவாக ஓடினாள்

செயப்படுபொருள் குன்றா வினை

ஒரு வினை செயப்படுபொருளை ஏற்று வருவது செயப்படுபொருள் குன்றா வினை எனப்படும்.

எ.கா. கண்ணன் சிற்பத்தைச் செதுக்கினான்.

இத்தொடரில் கண்ணன் – எழுவாய் ; சிற்பம் – செயப்படுபொருள்; செதுக்கினான் – பயனிலை. எதைச் செதுக்கினான் என்ற கேள்விக்கு விடையாகச் சிற்பம் என்று பொருள் தருவதால் இது செயப்படுபொருள் குன்றா வினை எனப்படும்.


மான்கள் தண்ணீர் குடித்தன

ஆசிரியர் பாடம் நடத்தினார்

வசந்தன் பந்து விளையாடினான்

மகிழினி கோப்பையை வென்றாள்

வேலன் ஈட்டி எறிந்தான்