ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 6
6.7 செந்தமிழ்ச்செல்வம்

திருக்குறள்

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால்பு ஊன்றிய தூண்.

- (குறள் – 983)

- திருவள்ளுவர்

(நாண் – நாணம்; ஒப்புரவு – உதவுதல்; கண்ணோட்டம் – இரக்கம்; சால்பு – சான்றாண்மை)

பொருள்:

அன்பு கொள்ளுதல், பழி புரிந்திட நாணுதல், பிறருக்கு உதவுதல், இரக்க உணர்வு கொள்ளுதல், வாய்மையைக் கடைப்பிடித்தல் ஆகிய ஐந்து பண்பும் சான்றாண்மையைத் தாங்கும் தூண்களாகும்.

பழமொழி

புயலுக்குப் பின்னே அமைதி.

சொல்வதைக் கேட்டு எழுதுக

மனித வாழ்க்கை சிறப்பானது. பிறருக்கு உதவிசெய்து வாழ்தல் மகிழ்வானது. தனக்கென வாழ்வதைவிடச் சமூகத்திற்காக வாழும்பொழுது வாழ்க்கை அழகு பெறுகிறது.

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

  1. அவசர கால ஊர்தி
  2. விழிப்புணர்வு
  3. ஒத்துழைப்பு