ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 6
படைப்பாற்றல் வளர்ப்போம் & உயர்நிலைத்திறன் & செயல்திட்டம்

6.10 படைப்பாற்றல் வளர்ப்போம்

கீழ்க்காணும் பாதிக்கதையைப் படித்து, மீதிக்கதையை எழுதுக.

முருகனும் குமரனும் பள்ளிக்குச் செல்கின்றனர். வழியில் பணப்பை ஒன்று இருப்பதை முருகன் பார்க்கிறான். உடனே அதைக் கையில் எடுக்கிறான். அப்போது, குமரன், யாரோ தொலைத்துவிட்டார்கள் போலும், வா, அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிடலாம் என்று கூறுகிறான். ஆனால், முருகன்

______________________________________________________________

______________________________________________________________

______________________________________________________________

______________________________________________________________

6.11 உயர்நிலைத்திறன்

குறிப்புகளை விரித்து, உரைப்பகுதி உருவாக்குக.

வயதான உழவர் – மகன்கள் நால்வர் – எப்போதும் சண்டை – உழவர் வருத்தம் – பாடம் கற்பிக்க நினைத்தல் – குச்சிகள் இணைந்த கட்டு – ஒவ்வொருவரையும் அழைத்தல் – உடைக்கச் சொல்லுதல் – ஒருவராலும் முடியவில்லை – கட்டிலிருந்து ஒரு குச்சி மட்டும் எடுத்தல் – எளிதாக உடைத்தல் – ஒற்றுமை – வலிமை – யாராலும் வெல்ல முடியாது. நால்வரும் புரிந்துகொள்ளல்.

6.12 செயல்திட்டம்

சமூக ஆர்வலர்களின் படங்களைத் தொகுத்துப் படத்தொகுப்பு ஒன்று உருவாக்குக.