ழகரம்
(முதல் பருவம்)
- (பாடல் – 39)
- ஔவையார்
(கலைமடந்தை – கலைமகள்; ஓதுகிறாள் – படிக்கிறாள்; மெத்த – மிகுதியாக; பந்தயம் – போட்டி; புலவீர் – புலவர்களே; சாண் – நீளத்தை அளவிடும் அளவு)
தான் இதுவரை படித்தது கைம்மண்ணளவே; கல்லாதது உலகளவு என நினைத்துக் கலைமகளே இன்னும் படித்துக் கொண்டிருக்கிறாள். ஆதலால், புலவர்களே! மிகுதியாகப் படித்துவிட்டோம் என்னும் செருக்குடன் வீண்பேச்சு பேசாதீர்கள். சிறு எறும்பும் அதன் கையினால் எண் சாண் அளவுடையதே ஆகும்.
பொறுமை கடலினும் பெரிது.