ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 8
8.7 செந்தமிழ்ச்செல்வம்

திருக்குறள்

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்

- (குறள் – 428)

- திருவள்ளுவர்

(அஞ்சு – அச்சப்படு; பேதைமை – அறியாமை; அறிவார் – அறிவுடையார்)

பொருள்:

அஞ்ச வேண்டியவற்றிற்கு அஞ்சாமல் இருப்பது, அறியாமை, அஞ் வேண்டியவற்றிற்கு அஞ்சி நடப்பது அறிவுடையார் செயல்.

பழமொழி

மின்னுவதெல்லாம் பொன்னல்ல.

சொல்வதைக் கேட்டு எழுதுக

மூங்கில் மரம் புல் வகையைச் சார்ந்தது. இது, மணலிலும் களிமண்ணிலும் வண்டல் மண்ணிலும் வளரும் தன்மை கொண்டது. உவர்நிலம் மற்றும் நீர் தேங்கியிருக்கும் மண்ணிலும் நன்கு வளரும்.

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

  1. புத்துணர்வு
  2. வாழ்நாள்
  3. மக்கள்
  4. பாதுகாப்பு