ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 8
விடை காண்போம்

அகிலன்

உலக உணவுத் திட்டம் அமைப்பானது பட்டினியை எதிர்த்துப் போராடுதல், போர்க்காலங்களில் பசியால் வாடும் மக்களுக்கு உணவு வழங்குதல் போன்ற செயல்களை மேற்கொள்கிறது.

நிலம், நீர், காற்று போன்றவை இயற்கை நமக்கு அளித்த கொடைகள் ஆகும்.

தந்தை பெரியார், சமூகச் சீர்திருத்தத்தைத் தம் வாழ்நாள் இலக்காகக் கொண்டு வாழ்ந்தார்.

ஏப்ரல் 22 புவிநாள் கொண்டாடப்படுகிறது.