ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 9
9.7 செந்தமிழ்ச்செல்வம்

திருக்குறள்

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்

- (குறள் – 517)

- திருவள்ளுவர்

பொருள்:

இந்தச் செயலை, இக்காரணங்களால் இவன் முடிப்பான் என்று ஆராய்ந்த பிறகு, அந்தச் செயலை அவனிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.

பழமொழி

எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.

சொல்வதைக் கேட்டு எழுதுக

வாசிப்புப் பழக்கம் அறிவு வளர்ச்சிக்கு வித்திடுகிறது. இப்பழக்கத்தை மாணவர்கள் வளர்த்துக்கொள்ளவேண்டும். நூல்கள் நமக்கு மிகச்சிறந்த வழிகாட்டிகள். பாடநூல்களுடன் பிற நல்ல நூல்களையும் வாசிக்கவேண்டும்.

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

  1. கல்வி
  2. பள்ளிக்கூடம்
  3. மாணவர்கள்