ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 10
10.7 செந்தமிழ்ச்செல்வம்

மூதுரை

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானும்தன்
பொல்லாச் சிறகை விரித்தாடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி

- (பாடல் 14)

- ஔவையார்

(கான மயில் – காட்டிலுள்ள மயில்; பாவித்து - எண்ணி)

பொருள்

ஆழ்ந்த கல்வி அறிவு இல்லாதவன், நன்கு கற்றவர்களைப்போலத் தன்னை நினைத்துக்கொண்டு, பேச நினைக்கும் செயலானது, காட்டிலுள்ள மயில் தன் அழகிய தோகையை விரித்து ஆடுவதைக் கண்டு, தன்னுடைய அழகில்லாத சிறகை விரித்து ஆடும் வான்கோழியின் செயலுக்கு ஒப்பானதாகும்.

பழமொழி

கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்.

சொல்வதைக் கேட்டு எழுதுக

மாண்டிசோரி கல்விமுறை குழந்தைகளை மையமாகக் கொண்டது. இம்முறையில் மாணவர்களின் தனித்திறனுக்கு இடம் கொடுக்கப்படுகிறது. வகுப்பறையில் துணைக் கருவிகள் பயன்படுத்த வலியுறுத்தப்படுகிறது. கற்கும் வேகத்திற்கேற்பப் பாடத்திட்டம் வடிவமைக்கப்படுகிறது.

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

  1. நற்பண்பு
  2. சுயமுயற்சி
  3. ஆர்வம்