ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 12
12.7 செந்தமிழ்ச்செல்வம்

திருக்குறள்

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை

- (குறள்: 672)

- திருவள்ளுவர்

(வினை – செயல்)

பொருள்:

காலம் தாழ்த்திச் செய்யக்கூடிய செயல்களைக் காலம் தாழ்த்திச் செய்க. ஆனால், காலம் தாழ்த்தாமல் செய்யக்கூடிய செயல்களை விரைந்து செய்க.

பழமொழி

காய்த்த மரந்தான் கல் அடிபடும்.

சொல்வதைக் கேட்டு எழுதுக

  1. தன்னம்பிக்கை உடையவர் வெற்றி பெறுவார்.
  2. உழைப்பால் உயர்ந்தோர் பலர் உள்ளனர்.
  3. தொழில் முனைவதற்கு முயற்சியும் முதலீடும் தேவை.

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

  1. வெற்றி
  2. பாதுகாப்பு
  3. முயற்சி