திருக்குறள்
உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து
- (குறள்-105)
- திருவள்ளுவர்
(வரைத்தன்று – அளவைப் பொருத்தது அன்று; சால்பு – பண்பு)
பொருள்:
உதவி என்பது செய்யப்படும் அளவைப் பொருத்தது அன்று. அந்த உதவியினைப் பெற்றுக் கொண்டவரின் பண்பைப் பொருத்ததே அதன் அளவு அமையும்.
பழமொழி
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
சொல்வதைக் கேட்டு எழுதுக
- வள்ளல் அதியமான் ஔவையாருக்கு நெல்லிக்கனி தந்தார்.
- ஓரி என்னும் வள்ளல் வில்லாற்றலில் சிறந்து விளங்கியதால் வல்வில் ஓரி என அழைக்கப்பட்டார்.
- பாரி என்னும் வள்ளல் பறம்பு மலையை ஆட்சி செய்தார். அவருக்கு அங்கவை, சங்கவை என மகள்கள் இருவர் இருந்தனர்.
சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக
- கொடை
- புகழ்
- செல்வம்
- உழைப்பு