திருக்குறள்
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து
- (குறள் -667)
- திருவள்ளுவர்
(எள்ளாமை - இகழாமை; அச்சாணி – வண்டியைத் தாங்கும் சிறிய ஆணி)
பொருள்:
உருளுகின்ற பெரிய தேர்க்கு அச்சிலிருந்து தாங்கும் சிறிய ஆணி போன்றவர்களும் உலகில் உள்ளனர். ஆகையால், ஒருவரது உருவத்தின் சிறுமையைக் கண்டு இகழக்கூடாத
பழமொழி
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.
சொல்வதைக் கேட்டு எழுதுக
- தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தவேண்டும்.
- இயற்கை வேளாண்மை முறைகளைக் கையாள வேண்டும்.
- வீடுகளில் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளை அமைக்கவேண்டும்
சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக
- விண்வெளி ஆராய்ச்சி
- அகன்ற திரை
- செயல்திட்டம்
- இயற்கை விவசாயம்