ழகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 20
20.3 மொழிக்கூறு

மொழிக்கூறு

ஒரு சொல்/ சொற்றொடர் இருபொருள்பட வருவது இரட்டுற மொழிதல்

கவின் : என்னை அறிவில்லாதவன் என்று அண்ணன் சொன்னான், அப்பா.
அப்பா : சரியாகத்தான் சொல்லியிருக்கிறான்.
கவின் : என்னப்பா? நீங்களும் இப்படிச் சொல்கிறீர்கள்?
அப்பா : ஆமாம், கவின். நீ அறிவில் ஆதவன். அதாவது, அறிவில் சூரியனைப்போல ஒளிவீசுபவன். அதனால்தான், அண்ணன் அப்படிச் சொன்னான். புரிந்ததா.
பேசுபவர் : இலக்கிய மன்ற விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருக்கும் விழாத் தலைவரை வருக வருக என வரவேற்கிறேன். அவர் எங்கும் எப்போதும் விழாத் தலைவர் எனக் கூறி என் உரையைத் தொடர்கிறேன்.
ஒருவர் : என்னாச்சு? ஏன் பின்தங்கிவிட்டீர்கள்?
மற்றொருவர் : முட்டாளுடன் நடந்ததால், பின்தங்க நேர்ந்தது.
ஒருவர் : என்ன ஐயா? என்னை முட்டாள் என்று சொல்கிறீரா?
மற்றொருவர் : அடடே, அப்படியெல்லாம் இல்லை. காலில் முள் தைத்துவிட்டது. அதனால், முள்தாளுடன் (முட்டாளுடன் – முள் தைத்த பாதத்துடன்) நடந்ததால், வலி மிகுந்து மெதுவாக நடக்கிறேன் என்று சொல்ல வந்தேன்.
1. மாசம்பத்து - மாசம் + பத்து (பத்து மாதம்)
- மாசம் + பத்து (பத்து மாதம்)
2. எட்டு - எட்டு (ஓர் எண்)
- எள் + து (எள்ளை உண்)
3. அந்தமான் - அந்தமான் (ஒரு தீவு)
- அந்த + மான் (ஒரு விலங்கு)
4. கம்பமா - கம்பு + மா (கம்பு மாவு)
- கம்பு + மா (கம்பத்தில் கட்டப்படும் விலங்கு (யானை))
5. மலைத்தேன் - மலை + தேன் (மலைப்பகுதியிலுள்ள தேன்)
- மலைத்தேன் (வியப்படைந்தேன்)