ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 24
24.7 செந்தமிழ்ச்செல்வம்

திருக்குறள்

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது

– (குறள் 124)

- திருவள்ளுவர்

(திரியாது - மாறாது; மாணப் பெரிது – மிகவும் பெரிது)

பொருள்:

தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வைவிட மிகப் பெரியதாகும்.

பழமொழி

செய்வன திருந்தச் செய்

சொல்வதைக் கேட்டு எழுதுக

  1. சான்றோர் இனத்திரு
  2. சூது விரும்பேல்
  3. நன்மை கடைப்பிடி
  4. நூல் பல கல்
  5. ஊருடன் கூடி வாழ்

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

  1. ஒழுக்கம்
  2. புகழ்
  3. பெருமை