ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 25
25.7 செந்தமிழ்ச்செல்வம்

திருக்குறள்

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

– (குறள் 948)

- திருவள்ளுவர்

(நோய்நாடி – நோயை ஆராய்ந்து; தணிக்கும் – குறைக்கும்)

பொருள்:

நோய் எது என ஆராய்ந்து, அதற்கான காரணத்தை ஆராய்ந்து, அதனைக் குறைக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்குப் பொருந்தும்படியாக மருத்துவம் செய்யவேண்டும்.

பழமொழி

சீரகம் இல்லா உணவு சிறக்காது

சொல்வதைக் கேட்டு எழுதுக

உணவு, உடலுக்கு ஆற்றலைத் தருகிறது; உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது; உறுப்புகள் தேய்ந்து அழிந்துவிடாமல் பாதுகாக்கிறது; உடலில் உண்டாகும் நோய்க்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

  1. ஆற்றல்
  2. ஊக்கம்
  3. மனநலம்