ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 27
27.7 செந்தமிழ்ச்செல்வம்

திருக்குறள்

இணர்ஊழ்த்தும் நாறா மலர்அனையர் கற்றது
உணர விரித்துரையா தார்

- (குறள்: 650)

- திருவள்ளுவர்

பொருள்:

தாம் கற்ற நூலின் பொருளைப் பிறர் உணருமாறு எடுத்துரைக்க முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்தபோதும் மணம் வீசாத மலரைப் போன்றவர் ஆவர்.

பழமொழி

நெருப்பில்லாமல் புகையாது

சொல்வதைக் கேட்டு எழுதுக

மனிதன் என்பவன் உணர்வும் அறிவும் கலந்த கலவை. மனிதனுக்குள்ளே இந்த இரண்டும் இணைந்து செல்லும்போதுதான், அவன் புகழ் பெறுகின்றான்.

சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக

  1. மன உறுதி
  2. . புகழ்
  3. ஆற்றல்