ழகரம்
(இரண்டாம் பருவம்)
ஒருவர் நேரே கூறுவதுபோல் இருப்பது நேர்க்கூற்றுத் தொடர்.
| நேர்க்கூற்று | |
| “முகிலா, நான் நாளை ஊருக்குச் செல்கிறேன்” என்று கண்ணன் கூறினான். | ![]() |
ஒருவர் நேரே கூறியதைப் படர்க்கையில் மாற்றிக் கூறுவது அயற்கூற்றுத் தொடர்.
| அயற்கூற்று | |
| தான் அடுத்த நாள் ஊருக்குச் செல்வதாகக் கண்ணன் முகிலனிடம் கூறினான். | ![]() |
| நேர்க்கூற்றை அயற்கூற்றாக மாற்றும்போது ஏற்படும் மாற்றங்கள் | |
| நேர்க்கூற்று | அயற்கூற்று |
| இன்று | அன்று |
| நாளை | மறுநாள் |
| நேற்று | முன்னாள் |
| இப்பொழுது | அப்பொழுது |
| இது | அது |
| இவை | அவை |
| இதனால் | அதனால் |
| நான் | தான் |
| நாம், நாங்கள் | தாம், தாங்கள் |
| நீ | அவன், அவள் |
| நீங்கள் | அவர்கள் |
நேர்க்கூற்றை அயற்கூற்றாக மாற்றும்போது கவனிக்கவேண்டியவை
| எ.கா. | |
| நேர்க்கூற்று | அயற்கூற்று |
| “நான் நேற்றே தேர்வுக்குப் படித்துவிட்டேன்“ என்று கமலி தன் தோழியிடம் கூறினாள். | கமலி தன் தோழியிடம், தான் முதல்நாளே தேர்வுக்குப் படித்துவிட்டதாகக் கூறினாள். |
| “கடைக்காரரே, தக்காளி என்ன விலை?“ என்று கந்தன் கேட்டான். | கந்தன் கடைக்காரரிடம் தக்காளியின் விலையைக் கூறுமாறு கேட்டான். |
| அம்மா, “இனியா, மழை பெய்கிறது. குடை எடுத்துக்கொண்டு போ“ என்றாள். | அம்மா இனியாவிடம் மழை பெய்வதாகவும் குடை எடுத்துக்கொண்டு போகுமாறும் கூறினாள். |
| “உன் பெயர் என்ன?“ என்று ஆசிரியர், மாணவனிடம் கேட்டார். | ஆசிரியர் மாணவனை நோக்கி அவனது பெயரைக் கூறுமாறு கேட்டார். |
| குழலி தன் அம்மாவிடம், “ஆஹா! எவ்வளவு அழகான தோட்டம்“ என்று வியந்தாள். | குழலி தன் அம்மாவிடம் தோட்டம் மிக அழகாக உள்ளதாகக் கூறினாள். |