ழகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 30
விடை காண்போம்

சிலப்பதிகாரத்தின் கதை நிகழ்வு மற்றும் கதை மாந்தர் மணிமேகலையிலும் தொடர்வதால், இரட்டைக்காப்பியம் என அழைக்கப்படுகிறது.

ஒருவர் நேரே கூறுவது போல் இருப்பது நேர்க்கூற்று ஆகும். எ.கா: “முகிலா, நான் நாளை ஊருக்குச் செல்கிறேன்” என்று கண்ணன் கூறினான் ஒருவர் நேரே கூறியதைப் படர்க்கையில் மாற்றிக்கூறுவது அயற்கூற்று ஆகும். எ.கா: தான் அடுத்த நாள் ஊருக்குச் செல்வதாக கண்ணன் முகிலனுக்குக் கூறினான்.

தொடர் நான்கு வகைப்படும். அவை: • செய்தியைத் தெரிவிப்பது செய்தித்தொடர். எ.கா: சிறப்பு விருந்தினர் விழாவில் பேருரை நிகழ்த்தினார். • வினாப் பொருளை உணர்த்துவது வினாத்தொடர். எ.கா: இப்பொருள் யாருக்குரியது? • கட்டளைப் பொருளில் வருவது கட்டளைத் தொடர். எ.கா: பூக்களைப் பறிக்காதே. • உணர்ச்சியை வெளிப்படுத்துவது உணர்ச்சித் தொடர். எ.கா: நீலக்கடலின் அலை என்னே அழகு!

இரு சொற்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து வருவது புணர்ச்சி எனப்படும். புணர்ச்சி இருவகைப்படும். அவை:

இயல்புபுணர்ச்சி: நிலைமொழியின் கடைசி எழுத்தும், வருமொழியின் முதல் எழுத்தும் சேரும் போது எவ்விதமாற்றமும் இன்றிப் புணர்வது இயல்புபுணர்ச்சி எனப்படும். எ.கா: குதிரை + வண்டி = குதிரைவண்டி

விகாரப் புணர்ச்சி: விகாரம் என்பதற்கு மாற்றம் எனப் பொருள்படும். இரு சொல் புணரும் போது விகாரம் தோன்றுவதால் (மாற்றம்) அது விகாரப்புணர்ச்சி எனப்படும். நிலைமொழியின் ஈற்றெழுத்தும் வருமொழியின் முதல் எழுத்தும் புணரும் போது, மூன்று மாற்றங்கள்ஏற்படும்.

  1. ஓர்எழுத்து புதிதாகத்தோன்றுவது தோன்றல் விகாரம். எ.கா: பூ + சோலை = பூஞ்சோலை
  2. ஓர் எழுத்து மற்றோர் எழுத்தாகத் திரிவது திரிதல் விகாரம். எ.கா: பல் + பசை = பற்பசை
  3. ஓர்எழுத்து கெடுவது கெடுதல் விகாரம்.
  4. எ.கா: மரம் + வேர் = மரவேர்

சொற்கள் ஒன்றோடு ஒன்று சேரும் போது க், ச், த், ப் ஆகிய வல்லின மெய்கள் மிகுந்து வரும். இவ்வாறு வருவன வல்லினம் மிகும் இடங்களாகும். வல்லின மெய்களை மிகுத்து எழுதுவதற்கு விதிகள் உள்ளன. அவற்றுள்

விதி 1

அ, இ, எ என்னும் சுட்டெழுத்துகள் பின் வல்லினம் மிகும். எ.கா: அக்குழலை

விதி 2

அந்த, இந்த, எந்த என்னும் சுட்டுத்திரிபுகள் பின் வல்லினம் மிகும். எ.கா: அந்தப்பக்கம்

விதி 3

இரண்டாம் வேற்றுமை விரியில் (ஐ) வல்லினம் மிகும். எ.கா: பாலைக்குடித்தான்