சிகரம்
(முதல் பருவம்)

பாடம் - 2
உயர்நிலைத்திறன் & செயல்திட்டம்

2.9 உயர்நிலைத்திறன்

கீழ்க்காணும் பாரதிதாசனின் பாடலைப் படித்து, அதன் கருத்தை எழுதுக

சிரித்த முல்லை

மாலைப் போதில் சோலையின் பக்கம்
சென்றேன். குளிர்ந்த தென்றல் வந்தது.
வந்த தென்றலில் வாசம் கமழ்ந்தது.
வாசம் வந்த வசத்தில் திரும்பினேன்.
சோலை நடுவில் சொக்குப் பச்சைப்
பட்டுடை பூண்டு படர்ந்து கிடந்து
குலுக்கென்று சிரித்த முல்லை
மலர்க்கொடி கண்டேன் மகிழ்ச்சிகொண்டேனே!

- பாவேந்தர் பாரதிதாசன்

2.10 செயல்திட்டம்

தமிழ் மொழியின் சிறப்புகளை எடுத்துக்கூறும் விதமாக உங்கள் வகுப்பறையில் ஒரு தமிழ் மாநாடு நடத்துக.