14.9 உயர்நிலைத்திறன்
அரிச்சந்திரனின் கதையைத் தெரிந்துகொள்ள, கீழ்க்காணும் தொடர்களை வரிசைப்படுத்துக.
- ஒரே ஒரு பொய் கூறினால் போதும், அவன் இழந்தவை அனைத்தும் அவனுக்கே கிடைத்துவிடும்.
- அரிச்சந்திரன் நீதியும் நேர்மையும் கொண்ட மன்னன். அவன் தன் வாழ்நாள் முழுவதும் பொய் கூறாமல் வாழ்ந்தான்.
- ஆனால், அரிச்சந்திரன் தன் உயிரேபோனாலும் பொய் கூறுவதை விரும்பவில்லை.
- விசுவாமித்திரர் கூறியதைக் கேட்ட அரிச்சந்திரன் அவருக்கே தன் நாட்டைக் கொடுத்துவிட்டான்.
- அரிச்சந்திரனின் நேர்மையும் பொய் கூறாத பண்பும் இந்தியப் பண்பாட்டு விழுமியத்திற்கு இன்றும் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.
- பொய் கூற விரும்பாத அரிச்சந்திரன், தன் நாட்டை மட்டுமின்றி மனைவியையும் மகனையும் இழந்தான்.
- இறுதியில் அவனது நேர்மையை அறிந்த விசுவாமித்திரர், அவனை வாழ்த்தி, அவன் இழந்தவற்றை மீண்டும் அளித்தார்.
- விசுவாமித்திரர் என்ற துறவி, அரிச்சந்திரனின் நேர்மையைச் சோதிக்க விரும்பினார்.
- தனது கனவில் வந்த அரிச்சந்திரன், நாட்டைத் தனக்குத் தந்துவிட்டதாக விசுவாமித்திரர் கூறினார்.
- இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள், தம் வாழ்நாளில் பொய் கூறாமல் வாழ்ந்ததற்கு அரிச்சந்திரன் கதை நிகழ்வே காரணம் எனக் கூறினார்.
14.10 செயல்திட்டம்
உலக வெப்பமாதல் குறித்து அறிவுறுத்தும் வகையில் பொம்மலாட்ட நிகழ்ச்சிக்கான கதைக்கருவை உருவாக்கி, வகுப்பில் நிகழ்த்திக்காட்டுக.