சிகரம்
(இரண்டாம் பருவம்)
- நல்லந்துவனார் (பாடல்: 133, அடிகள்: 6-14)
ஆற்றுதல் என்பது இல்லாதவருக்கு உதவுதல். போற்றுதல் என்பது தம்மைச் சேர்ந்தாரை விட்டுப் பிரியாமல் இருத்தல். பண்பு என்பது ’எது பெருமைதரக்கூடியது?’ என்று அறிந்து அதன்படி நடத்தல். அன்பு என்பது தன்னைச் சேர்ந்தவர்களை வெறுக்காமல் இருத்தல். அறிவு என்பது அறியாமையால் ஒருவர் பேசும் சொற்களைப் பொறுத்துக்கொள்ளுதல். செறிவு என்பது நாம் சொன்ன சொல் தவறாது நடந்துகொள்ளுதல். நிறை என்பது பிறரிடம் சொல்லாமல் மறைத்துவைக்க வேண்டிய செய்திகளைப் பாதுகாத்தல். முறை என்பது தவறு செய்தவருக்கு உரிய தண்டனையைப் பெற்றுத்தருதல். பொறை என்பது பிறர் செய்த தீமைகளைப் பொறுத்துக்கொள்ளுதல்.
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று கலித்தொகை. கடவுள் வாழ்த்துப்பாடல் ஒன்று அகப்பொருள் சார்ந்த பாடல்கள் 149-ஆக மொத்தம் 150 பாடல்களைக் கொண்டது இந்நூல். கலிப்பாவால் பாடப்பட்டது. இந்நூலைத் திணைக்கு ஒருவர் என ஐந்திணைகளையும் புலவர்கள் ஐவர் பாடியுள்ளனர். முதன்முதலில் இந்நூலைப் பதிப்பித்தவர் சி.வை. தாமோதரனார். இந்தப் பாடப்பகுதியில் அமைந்துள்ள பாடலின் ஆசிரியர் நல்லந்துவனார்.
| 1. | செறாஅமை | - | வெறுக்காமல் இருத்தல் | ||
| 2. | நோன்றல் | - | பொறுத்துக்கொள்ளுதல் | ||
| 3. | மறாஅமை | - | சொன்னசொல் தவறாமல் நடத்தல் | ||
| 4. | வௌவல் | - | தண்டித்தல் |