என வருகின்றன.
ஒரே ஆசிரியரால் இரண்டு உரைகளும் எழுதப் பெற்றிருக்குமாயின்
இவ்வேறுபாடு நேர்ந்திருக்காது என்பது கருதத்தக்கது.
யாப்பருங்கல விருத்தியின் ஆசிரியர் மேற்கோளுக்குப் பயன்படுத்தும்
இலக்கண ஆசிரியர்கள் மயேச்சுரர் என்பார் ஒருவர். அவரை மட்டும்
மோனை எதுகை நயமுற நெஞ்சாரப் பாராட்டுகின்றார். இதனால்,
‘மயோச்சுரரின் மாணவரோ, அவர் பரம்பரையினரோ விருத்தியுரை
கண்டவர் ஆதல் வேண்டும்’1 என்பர்.
1.‘‘விருத்தியுரை எழுதியவர் பெருமான்பெயர் மகிழ்ந்த பேராசிரியர் என
அவர் சிறப்பிக்கும் மயேச்சுரருடைய மாணவரோ அவர் பரம்பரையினரோ
ஆதல் வேண்டும்’’ - தென்றலிலே தேன் மொழி. (பக். 59 - 60)
டாக்டர் மொ.அ. துரையரங்கனார்.
|