முகப்பு |
இளவேட்டனார் |
33. பாலை |
'படு சுடர் அடைந்த பகு வாய் நெடு வரை, |
||
முரம்பு சேர் சிறுகுடி, பரந்த மாலை, |
||
புலம்பு கூட்டுண்ணும் புல்லென் மன்றத்து, |
||
கல்லுடைப் படுவில் கலுழி தந்து, |
||
5 |
நிறை பெயல் அறியாக் குறைத்து ஊண் அல்லில், |
|
துவர்செய் ஆடைச் செந் தொடை மறவர் |
||
அதர் பார்த்து அல்கும் அஞ்சுவரு நெறியிடை, |
||
இறப்ப எண்ணுவர் அவர் எனின், மறுத்தல் |
||
வல்லுவம்கொல்லோ, மெல்லியல்! நாம்?' என |
||
10 |
விம்முறு கிளவியள் என் முகம் நோக்கி, |
|
நல் அக வன முலைக் கரை சேர்பு |
||
மல்கு புனல் பரந்த மலர் ஏர் கண்ணே. | உரை | |
பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகளது குறிப்பு அறிந்த தோழி தலைமகற்குச் சொல்லியது.- இளவேட்டனார்
|
157. பாலை |
இருங் கண் ஞாலத்து ஈண்டு தொழில் உதவிப் |
||
பெரும் பெயல் பொழிந்த வழி நாள் அமையத்து, |
||
பல் பொறி அரவின் செல் புறம் கடுப்ப |
||
யாற்று அறல் நுணங்கிய நாட் பத வேனில், |
||
5 |
இணர் துதை மாஅத்த புணர் குயில் விளித்தொறும், |
|
நம்வயின் நினையும் நெஞ்சமொடு, கைம்மிகக் |
||
கேட்டொறும் கலுழுமால் பெரிதே-காட்ட |
||
குறும் பொறை அயல நெடுந் தாள் வேங்கை |
||
அம் பூந் தாது உக்கன்ன |
||
10 |
நுண் பல் தித்தி மாஅயோளே. | உரை |
பொருள்வயிற் பிரிந்த தலைவன் பருவம் உணர்ந்த நெஞ்சிற்கு உரைத்தது.-இள வேட்டனார்
|