முகப்பு |
கண்ணகாரன் கொற்றனார் |
143. பாலை |
ஐதே கம்ம யானே; ஒய்யென, |
||
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து, |
||
ஓரை ஆயமும் நொச்சியும் காண்தொறும், |
||
நீர் வார் கண்ணேன் கலுழும் என்னினும், |
||
5 |
கிள்ளையும், 'கிளை' எனக் கூஉம்; இளையோள் |
|
வழு இலள் அம்ம, தானே; குழீஇ, |
||
அம்பல் மூதூர் அலர் வாய்ப் பெண்டிர் |
||
இன்னா இன் உரை கேட்ட சில் நாள் |
||
அறியேன் போல உயிரேன்; |
||
10 |
'நறிய நாறும் நின் கதுப்பு' என்றேனே. | உரை |
மனை மருட்சி.-கண்ணகாரன் கொற்றனார்
|