முகப்பு |
கூடலூர்ப் பல்கண்ணனார் |
200. மருதம் |
கண்ணி கட்டிய கதிர அன்ன |
||
ஒண் குரல் நொச்சித் தெரியல் சூடி, |
||
யாறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில், |
||
'சாறு' என நுவலும் முது வாய்க் குயவ! |
||
5 |
ஈதும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ- |
|
ஆம்பல் அமன்ற தீம் பெரும் பழனத்துப் |
||
பொய்கை ஊர்க்குப் போவோய்ஆகி, |
||
'கை கவர் நரம்பின் பனுவற் பாணன் |
||
செய்த அல்லல் பல்குவ-வை எயிற்று, |
||
10 |
ஐது அகல் அல்குல் மகளிர்!-இவன் |
|
பொய் பொதி கொடுஞ் சொல் ஓம்புமின்' எனவே. | உரை | |
தோழி தலைமகளது குறிப்பு அறிந்து, வாயிலாகப் புக்க பாணன் கேட்ப, குயவனைக் கூவி, 'இங்ஙனம் சொல்லாயோ?' என்று குயவற்குச் சொல்லியது.-கூடலூர்ப் பல் கண்ணனார்
|
380. மருதம் |
நெய்யும் குய்யும் ஆடி, மெய்யொடு |
||
மாசு பட்டன்றே கலிங்கமும்; தோளும், |
||
திதலை மென் முலைத் தீம் பால் பிலிற்ற, |
||
புதல்வற் புல்லிப் புனிறு நாறும்மே; |
||
5 |
வால் இழை மகளிர் சேரித் தோன்றும் |
|
தேரோற்கு ஒத்தனெம் அல்லேம்; அதனால் |
||
பொன் புரை நரம்பின் இன் குரல் சீறியாழ் |
||
எழாஅல் வல்லை ஆயினும், தொழாஅல்; |
||
கொண்டு செல்-பாண!-நின் தண் துறை ஊரனை, |
||
10 |
பாடு மனைப் பாடல்; கூடாது நீடு நிலைப் |
|
புரவியும் பூண் நிலை முனிகுவ; |
||
விரகு இல மொழியல், யாம் வேட்டது இல் வழியே! | உரை | |
பாணற்குத் தோழி வாயில் மறுத்தது.-கூடலூர்ப் பல்கண்ணனார்
|