முகப்பு |
நக்கண்ணையார் |
19. நெய்தல் |
இறவுப் புறத்து அன்ன பிணர் படு தடவு முதல் |
||
சுறவுக் கோட்டன்ன முள் இலைத் தாழை, |
||
பெருங் களிற்று மருப்பின் அன்ன அரும்பு முதிர்பு, |
||
நல் மான் உழையின் வேறுபடத் தோன்றி, |
||
5 |
விழவுக் களம் கமழும் உரவு நீர்ச் சேர்ப்ப! |
|
இன மணி நெடுந் தேர் பாகன் இயக்க, |
||
செலீஇய சேறிஆயின், இவளே |
||
வருவை ஆகிய சில் நாள் |
||
வாழாளாதல் நற்கு அறிந்தனை சென்மே! | உரை | |
புணர்ந்து நீங்கிய தலைவனைத் தோழி வரைவு கடாயது.-நக்கண்ணையார்
|
87. நெய்தல் |
உள் ஊர் மா அத்த முள் எயிற்று வாவல் |
||
ஓங்கல்அம் சினைத் தூங்கு துயில் பொழுதின், |
||
வெல் போர்ச் சோழர் அழிசிஅம் பெருங் காட்டு |
||
நெல்லி அம் புளிச் சுவைக் கனவியாஅங்கு, |
||
5 |
அது கழிந்தன்றே-தோழி!-அவர் நாட்டுப் |
|
பனி அரும்பு உடைந்த பெருந் தாட் புன்னை |
||
துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும் |
||
சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும், |
||
பெருந் தண் கானலும், நினைந்த அப் பகலே. | உரை | |
வரைவிடை வைத்துப்பிரிய ஆற்றாளாய தலைவி கனாக் கண்டு, தோழிக்கு உரைத்தது.-நக்கண்ணையார்
|