முகப்பு |
நல்வெள்ளியார் |
7. பாலை |
சூருடை நனந் தலைச் சுனை நீர் மல்க, |
||
பெரு வரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப, |
||
கல் அலைத்து இழிதரும் கடு வரற் கான் யாற்றுக் |
||
கழை மாய் நீத்தம் காடு அலை ஆர்ப்ப, |
||
5 |
தழங்கு குரல் ஏறொடு முழங்கி, வானம் |
|
இன்னே பெய்ய மின்னுமால்-தோழி! |
||
வெண்ணெல் அருந்திய வரி நுதல் யானை |
||
தண் நறுஞ் சிலம்பில் துஞ்சும் |
||
சிறியிலைச் சந்தின வாடு பெருங் காட்டே. | உரை | |
பட்ட பின்றை வரையாது கிழவோன் நெட்டியிடைக் கழிந்து பொருள்வயிற்பிரிய,ஆற்றாளாய தலைவிக்குத்தோழிசொல்லியது.-நல்வெள்ளியார்
|
47. குறிஞ்சி |
பெருங் களிறு உழுவை அட்டென, இரும் பிடி |
||
உயங்குபிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது, |
||
நெய்தற் பாசடை புரையும் அம் செவிப் |
||
பைதல்அம் குழவி தழீஇ, ஒய்யென |
||
5 |
அரும் புண் உறுநரின் வருந்தி வைகும் |
|
கானக நாடற்கு, 'இது என' யான் அது |
||
கூறின் எவனோ-தோழி! வேறு உணர்ந்து, |
||
அணங்கு அறி கழங்கின் கோட்டம் காட்டி, |
||
வெறி என உணர்ந்த உள்ளமொடு மறி அறுத்து, |
||
10 |
அன்னை அயரும் முருகு நின் |
|
பொன் நேர் பசலைக்கு உதவாமாறே? | உரை | |
சிறைப்புறமாகத்தோழி தலைமகளுக்கு உரைப்பாளாய்ச்சொல்லியது.-நல்வெள்ளியார்
|